Friday, July 9, 2010

1936ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட பீல்ட்ஸ் மெடல்தான் கணிதத்திற்கான நோபல் பரிசு என்று அழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு 1982ம் ஆண்டு முதல் கணிப்பொறி அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு நவலீனா மெடல் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு காஸ் மெடல் அப்ளைட் மேதமெட்டிக்கலிற்காக 2006ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
அதேபோல இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் உலக அளவிலான கணிதவியல் மாநாட்டில் செர்ன் மெடல் விருது வழங்கப்படவிருக்கிறது. கணதத்தில் மிகத் திறமையான தனிமனித சாதனை செய்த சாதனையாளருக்கு வாழ்நாள் சாதனை விருதாக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது முதல் முறையாக ஹைதராபாத்தில் நடக்கும் உலக கணிதவியல் மாநாட்டில் வழங்கப்படுவதுதான் குறிப்பிடத்தக்கது.
இந்த விருது ஷிங் ஷென் செர்ன் என்ற சீன கணிதவியலாளர் நினைவாக வழங்கப்படவிருக்கிறது. இவர் மாடர்ன் ஜாமென்டரி, குளோபல் டிப்ரன்ஷியல் ஜியாமன்டரியில் தனி முத்திரை பதித்தவர் ஆவர். வாழ்நாள் சாதனையாளரான இவர் பெயரில் இந்த விருதை வழங்கப் பெருமைப்படுவதாக செர்ன் மெடல் பவுன்டேஷன் தெரிவித்துள்ளது.இந்த விருதின் மதிப்பு 5 லட்சம் அமெரிக்க டாலர்.
இப்படி உலகப் புகழ்பெற்ற கணிதவியல் மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுவது நமக்கு பெருமையான விஷயம்தான். ஆனால், அதே நேரத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இந்த விருதைப் பெற்றவர்கள் பட்டியலில் விருது பெற்ற கணிதவியலாளர்களில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவருக்குத்தான் இந்த விருது கிடைத்திருக்கிறது. ராமானுஜம் முதற்கொண்டு மிகப்பெரிய கணிதவியலாளர்கள் பிறந்த நம் நாட்டில் கணிதத்திற்கான சர்வதேச விருது தனிப்பட்ட இந்தியருக்கு இந்த விருது கிடைப்பது எப்போது?

No comments:

Post a Comment