Wednesday, March 17, 2010

ஒரு மரம் = 20 கார்!




பூமிப்பரப்பில் கார்பன்டைஆக்ஸைடின் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதனால் துருவப் பகுதியில் பனிப்பாறை உருகுதல். பருவநிலை மாற்றம். குறைந்த மழை, அதிக வெப்பம். இப்படி மிரட்டிக்கொண்டிருக்கிறது குளோபல் வார்மிங். என்னச் செய்யப்போகிறோம் என்று உலக நாடுகளே பயந்துகொண்டிருக்க, அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் புதிதாக செயற்கை இழையிலான மரத்தை (படம்) உருவாக்கியுள்ளார்கள். இயற்கையான மரத்தில் உள்ள குணாதிசயம் நமக்குத் தெரியும். கார்பன்டை ஆக்ஸைடை உட்கிரகித்துக்கொண்டு, ஆக்ஸிஜனை வெளியேற்றும். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த மரமும் அப்படித்தான். ஆனால், அதிலும் ஒரு படி மேலப்போய் மரத்தைவிட 1000 மடங்கு விரைவாக கார்பன்டை ஆக்ஸைடை உட்கிரகித்துக் கொள்ளுமாம். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டன் கார்பன் டை ஆக்ஸைடை உட்கிரகிக்குமாம். இன்னும் புரியும்படி சொல்வதென்றால் 20 கார்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்ஸைடை ஒரு செயற்கை மரம் உட்கிரகித்துக் கொள்ளும். இந்த மரங்களை நாடு முழுவதும் நட்டால், புவி வெப்பமயமாதல் பிரச்னை போயே போச் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனா பாருங்க... இந்த ஒரு மரத்தை தயாரிக்க மட்டும் 13 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவாகுதாம்.

No comments:

Post a Comment