Wednesday, March 17, 2010

சாப்பாடு தயாரிக்க புது மிஷின்!




குழம்புல உப்பு அதிகமா இருக்கு. பொரியல்ல எண்ணெய் ஜாஸ்தியா இருக்கு. இப்படியே போனா ஹெல்த் என்ன ஆகறது? இது எல்லார் வீட்டிலும் கேட்கக்கூடிய புலம்பல். உப்பு, புளிப்பு, காரம் எல்லாம் சரியா கணக்குப் பண்ணி போட்டாக்கூட எண்ணெய் கொஞ்சம் ஜாஸ்தியா ஆயுடுது. என்னதான் பண்றது புரியலை. ஸ்பீடா சமையல் பண்றதுக்கு குக்கர், மைக்ரோஓவன் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கார். ஆனா, அவரு நாக்குக்கும், உடம்புக்கும் ஏத்த மாதிரி சமைக்க மட்டும் முடியல... இது இல்லத்தரிசகளின் புலம்பல். இந்த ஒட்டுமொத்த குறைகளையும் தீர்க்கறதுக்காக புது சமையல் எந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள் மார்சிலோ கோலோ, அமித் ஷோரான் என்ற இரண்டு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள். "கார்னுகோபியா 3டி புட் பிரிண்டர்' என்று பெரிடப்பட்டுள்ள இந்த உணவு தயாரிப்பு மெஷினில் நாம் என்ன சமைக்கப் போகிறோமோ அதை அதில் உள்ள பாத்திரத்தில் போட்டுவிட்டு அதில் சேர்க்கப்படும் எண்ணெய் உள்ளிட்ட சமாசாரங்களை டைப் செய்தாலே போதும். தேவையான நிறம், மணம், திடம், எண்ணெய் சமாசாரங்களை எல்லாம் சரி விகிதத்தில் அதுவே கலந்து, சாப்பாட்டை தயார் செய்து தந்துவிடுகிறது. இதனால், காரம், உப்பு, புளிப்பு, அதிக எண்ணெய் போன்ற பிரச்னைகள் வராது. உணவில் உள்ள சத்தும் பாதுகாக்கப்படுகிறதாம்.

No comments:

Post a Comment