நடந்ததை பேசியே பிரியும் ஜோடிகள்!
கல்யாணம் முடிஞ்ச ஆறே மாசத்துல டைவர்சுக்கு நீதிமன்ற படியேறும் வழக்கம் நம் நாட்டில் ரொம்பவே அதிகரிச்சிருக்கு. இது நம்ம நாட்டு கலாசாரமா...? அயல்நாட்டு கலாசாரமா என்று பட்டிமன்றம் வைப்பதை விடுத்து, இந்த மாதிரி டைவர்ஸ் அடிக்கடி நடக்கறதுக்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால், ஈகோ... என்ற ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு சென்றுவிடுவோம். ஆனா, இதையே ஒரு ஆராய்ச்சியாவே பண்ணிட்டாங்க கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம். இவங்க டைவர்ஸ் ஆன சில தம்பதிகளை வைத்து மனோரீதியா ஆராய்ச்சி செஞ்சி பார்த்தபோது, இவர்கள் ஈகோ என்ற ஒன்றுக்காக டைவர்ஸ் ஆவதை விட, பழைய சம்பவங்களை அதாவது நடந்து முடிந்த சில விஷயங்களைப் பற்றி பேசி, விவாதம் செய்து, அதனால் பாதி சண்டை வருகிறது. அதன் உச்சக்கட்டம்தான் இந்த டைவர்ஸ் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
so dont speak old memories with your wife
ReplyDelete