Friday, July 9, 2010

சர்வதேச கணித மாநாடு

ஒவ்வொரு துறைக்கும் உலகளாவிய விருதுகளை சர்வதேச சமூகம் வழங்கி வருகிறது. கலைத்துறைக்கு ஆஸ்கார் விருதுகள், அறிவியல், கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு, எழுத்துக்கு புட்கர் பரிசு இப்பஐ சர்வதேச அங்கீகாரத்தின் பட்டியலில் கணிதத்தில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்க சர்வதேச அளவில் விருதுகளை வழங்கி வருகிறது.
இன்டர்நேஷனல் மேதமெட்டிக்கல் காங்கிரஸ் என்ற அமைப்பு நான்கு வருடத்திற்கு ஒருமுறை சர்வதேச அளவில் நடைபெறும் கணித மாநாட்டில் உலகளவில் கணிதத்தில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. இந்த விருது கணிதப் பாடத்திற்கான நோபல் விருது என்று வர்ணிக்கப்படுகிறது.
இப்படி உலக அளவில் பிரபலமான இந்த சர்வதேச கணித மாநாடு முதல் முறையாக இந்தியாவில் ஹைதராபாத்தில் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. 113 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த கணித மாநாடு, முதல் முறையாக இந்தியாவில் நடக்கவிருப்பதால், சர்வதேச கணித சமூகத்தின் பார்வை தற்போது இந்தியாவின் மீது இருக்கிறது.
இப்படி கணிதப் பாடத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த விருது வந்த வரலாறே சுவராஸ்யமானதுதான்.
1890ம் ஆண்டு கணிதவியலாளர்களுக்கான மாநாடு ஒன்று சிகாகோ நகரில் நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜெர்மன் கணிதவியலாளர்கள் பெலிக்ஸ் கெலின் மற்றும் ஜார்ஜ் கேண்டர் என்பவர்கள், கணிதத்தில் சிறந்து விளங்கும் நபர்களை கௌரவிக்க விருதுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள். அந்தக் கோரிக்கை 1893ம் ஆண்டு நடைபெற்ற கணிதவியலாளர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த விருதுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து உலகளவிலான கணிதவியலாளர்களை ஒன்றினைத்து சர்வதேச கணித மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. உலகளவில் கணிதத்திற்காக நடைபெற்ற முதல் மாநாட்டில் 16 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 208 கணிவியலாளர்கள் கலந்துகொண்டார்கள். இதில் 12 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 7 பேர். மற்றவர்கள் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த மாநாட்டின் போது பல்வேறு கணித சமன்பாடுகளில் உள்ள சர்ச்சைகள், சந்தேகங்கள் தீர்க்கப்படும். அந்த மாநாடு ஒப்புதல் கொடுத்த எளிய கணித முறைப் பாடங்கள் இன்றும் நம் கணிதப் பாடத்தில் படித்து வருகிறோம்.
பின்னர் இரண்டாவது சர்வதேச கணித மாநாடு 1900ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றத. இந்த மாநாட்டின்போது டேவிட் ஹில்பர்ட் என்ற ஜெர்மன் நாட்டு கணிதவியலாளர் புகழ்பெற்ற தீர்க்கப்படாத 3 கணக்குகளுக்கு தீர்வு சொன்னார். அவர் சொன்ன தீர்வுகள்தான் நாம் இப்போது ஹில்பர்ட் சமன்பாடுகள் என்று படிக்கிறோம்.
கணிதத்தில் உலகளவில் சிறந்து விளங்கும் நபருக்கு இந்த மாநாடு பீல்ட்ஸ் மெடல் என்ற விருதை வழங்குகிறது.இப்பரிசுதான் கணிதத்தின் நோபல் என்று கருதப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்ட, இரண்டு, மூன்று அல்லது நான்கு கணிதவியலாளர்களுக்கு அளிக்கப்படும் இந்த விருது கனேடியக் கணிதவியலாளரான ஜோன் சாள்ஸ் பீல்ட்ஸ் என்பவரால் 1924ம் ஆண்டு முன்மொழியப்பட்டதாகும். கனடாவிலுள்ள டொராண்டோவில் 1924ல் பன்னாட்டு கணித மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தலைவராக இருந்தவர் பீல்ட்ஸ். மாநாட்டை நடத்துவதற்காக சேகரிக்கப்பட்ட பணத்தில் செலவு போக மீதமிருந்ததை கணிதத்தில் உலகம் போற்றும் சாதனை செய்தவர்களுக்கு ஒரு பரிசு கொடுப்பதற்காக இருக்கட்டும் என்று நன்கொடையாக கொடுத்தார். அவர் இறந்த பிறகு 1932ம் ஆண்டு ஜூரிக்கில் கூடிய மாநாட்டில் அந்த நன்கொடை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முதல் இரண்டு மெடல்கள் 1936ம் ஆண்டு ஆஸ்லோ மாநாட்டில் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு <உலகப்போரினால், மாநாடு நடத்த முடியாமல் போனது. அதற்கடுத்த மாநாடு 1950ம் ஆண்டுதான் நடந்தது. அதற்குப் பிறகு இந்த கணித மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த விருதில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், உலகக் கணிதவியலாளர்களெல்லாம் சேர்ந்து செயல்பட்டுக் கொடுக்கப்படும் பரிசு இது.
பீல்ட்ஸ் மெடல் என்ற பெயரில் இந்த விருது கொடுக்கப்பட்டாலும், மெடலில் பீல்ட்ஸ் என்ற பெயர் பொறிக்கப்படுவதில்லை.
உலகளவிலான மாநாடு 1897ம் ஆண்டு ஆரம்பித்தாலும், சிறந்த கணிதவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டார்களே தவிர, அவர்களுக்கு விருது மற்றும் மெடல் 1936ம் ஆண்டில் இருந்துதான் வழங்கப்பட்டு வந்தன.

No comments:

Post a Comment