Friday, March 12, 2010

பொரிச்சதும் நல்லதுதான்!




உடலை மிகவும் ஆரோக்கியமாய் வைத்திருப்பவர்களுக்கு எண்ணெய் பலகாரங்களை பார்த்தாலே ஒரு வித அலர்ஜி தொற்றிக்கொள்ளும்தான். ஏனென்றால், அந்த எண்ணெயில் உள்ள கொழுப்புதான் உடல் பலஹீனமாதவதற்கு காரணம் என்பது நம்மில் பலரின் எண்ணமும் கூட.
கொழுப்பில் மட்டுமா உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய கொழுப்பு இருக்கிறது, பால் பொருட்களில் ஆரம்பித்து இறைச்சி வரை எல்லாவற்றிலும் கொழுப்பு இருக்கத்தானே செய்கிறது. அப்படியென்றால், இதுவும் கூட உடம்பிற்கு தீங்கிழைக்கத்தானே செய்யும். ஆனால், சில எண்ணெய்களில் பொரிக்கப்படும் உணவானது இதய பாதிப்பு ஏற்படுவதைக்கூட தடுக்கிறதாம்.
தொடர்ந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் பொருள் சாப்பிடுவது கண்டிப்பாக உடலுக்கு தீங்குதான். ஆனால், எப்போதாவது எண்ணெயில் பொரித்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது சொல்லப்போனால் நன்மைதான். ஏனென்றால், சில நல்ல ஆரோக்கியமான கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவுப்பொருட்களில் இருந்து அதிகஅளவில் நார்ச்சத்து கிடைக்கிறதாம். அப்படியென்றால் இது உடலுக்கு நல்லதுதானே.
உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு... வகையறாக்கள் எண்ணெயில் 360லிருந்து 375 டிகிரி வரை வெப்பப்படுத்தி, பின் பொரித்தெடுக்கும்போது, குறைவாகவே எண்ணெயை பண்டங்கள் உறிஞ்சுகிறதாம். இதனால், உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறது ஆராய்ச்சி.
அதனால, பொரிச்ச உணவும் உடம்புக்கு நல்லதுதான்... ஆனா, நீங்க தேர்ந்தெடுக்கும் எண்ணெய் தரமான எண்ணெயாக இருக்கணும். அதுதான் முக்கியம்!

No comments:

Post a Comment