Friday, March 12, 2010

பயிற்சியோடு மனசும் வேணும்!



அந்தப் பொண்ணு பேரு மேகலை. கொஞ்ச நாளா அளவுக்கு அதிகமா வெயிட் போட்டுடுச்சு. கவலைப்பட்டுபோய் ஒரு டயட்டீசியனை போய் பார்த்திருக்கிறார். அவர் கொடுத்த அறிவுரைப்படி காலையில் எழுந்து நடைப்பயிற்சி. அப்புறம் கொஞ்சம் டீ, ரெண்டு பிஸ்கட். இரண்டு மணி நேரம் கழித்து காலை உணவாக ஒரு கிண்ணம் அளவுக்கு உப்புமா அல்லது பொங்கல். அப்புறம் சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சி. அப்புறம் கொஞ்சம் ப்ரூட் சாலட். பின் அரைமணி நேரம் கழித்து கொஞ்சம் ஊற வைத்த சுண்டல். அடுத்த இரண்டரை மணி நேரம் கழித்து, இதே மாதிரி ஒரு கிண்ணம் அளவிற்கு பழ வகைகள். இரவு உணவு ரெண்டு சப்பாத்தி, சூப், கொஞ்சம் சாலட்.
டயட்டீசியன் சொன்ன அத்தனையும் செய்து பார்த்தார் மேகலை. ஆனா, ரிசல்ட் என்னவோ பூஜ்ஜியம். ஏனென்றால், முன்பிருந்ததைவிட இப்போது இன்னும் கொஞ்சம் புஷ்டியானாள் மேகலை. இது ஏன்? எப்படி? என்ற கேள்விகளுக்குத்தான் பதில் கூறியுள்ளார் ஆராய்ச்சியாளர்.
மேகலை செய்த உடற்பயிற்சி எல்லாமே சரிதான். ஆனால், அவர் மனப்பூர்வமாகவும், ஆத்ம திருப்தியாகவும் செய்தாரா... அப்படி செய்திருந்தால் மேகலையின் உடல் கண்டிப்பாக மெலிந்திருக்கும். ஆனால், வேகம் இருந்த அளவுக்கு ஆர்வம் இல்லை அதன் விளைவுதான் மேகலா குண்டானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வமாய் செய்தால்தானே அதற்குண்டான பலன் கிடைக்கும். இது உடற்பயிற்சிக்கும் பொருந்தும் என்பதுதான் ஆராய்ச்சியாளரின் பதில்.

No comments:

Post a Comment