Friday, March 12, 2010

நோய் தீர்க்கும் தண்ணீர்!



காலைல முழிச்சவுடனே தண்ணீர் குடிச்சா ரொம்ப நல்லதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, எப்படி எப்போ குடிக்கணும்னு நிறைய பேருக்கு குழப்பம்.
தண்ணீரை மட்டும் சரியா தினமும் குடிச்சிட்டு வந்தோம்னா... 30 நாளைக்குள் ரத்த அழுத்தம், 10 நாளில் வாயுத் தொல்லை, 30 நாளில் சர்க்கரை நோய், 180 நாளில் கேன்ஸர், 90 நாளில் காச நோய் என்று எல்லாமே சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்.
படி 1: காலையில் எழுந்தவுடன் பல் துளக்குவதற்கு முன் 160 மில்லி பிடிக்கும் 4 கிளாஸ் தண்ணீர் குடிக்கணும்.
படி 2: பல் துளக்கிய உடனே சாப்பிடவோ 45 நிமிடத்துக்குள் தண்ணீரோ அருந்தக் கூடாது.
படி 3: 45 நிமிடம் கழித்து காலை உணவை முடித்துக் கொள்ளலாம்.
படி 4: காலை சிற்றுண்டியை முடித்த 15 நிமிடத்துக்குள் வேறு ஏதும் உணவு சாப்பிடக்கூடாது.

எடுத்த எடுப்பிலேயே 4 கிளாஸ் தண்ணீர் குடிக்க முடியாதவங்க... ஒரு கிளாஸ், அப்புறம் ரெண்டு கிளாஸ்னு குடிச்சுப் பழகுங்க.. அப்புறம் தானாவே பழகிடும். உடம்புலேயும் எந்த நோயும் வராது.

No comments:

Post a Comment