Wednesday, February 3, 2010

பழம் சாப்பிட்டா குழந்தை பிறக்காது

இப்படியும் பயமுறுத்துறாங்க:

கல்யாணம் முடிஞ்சி மறுவருஷம் குழந்தை பிறந்திடணும். இல்லாட்டி அவ்வளவுதான்... அந்தப் பெண் வாங்கும் ஏச்சுப் பேச்சுக்கள் எல்லாம் உலகறிந்த விஷயம்தானே!. இதற்காக கல்யாணம் முடிஞ்ச மறுவருஷமே எப்படியாவது பொண்ணுக்கு குழந்தை பொறந்திடணும் என்று, புதுப்பெண்ணுக்கு, பார்த்து பார்த்து பழங்கள், சத்தான உணவுப் பொருட்கள் வீட்டார் வாங்கிக் கொடுப்பதும் வழக்கம். ஆனா, இதுலதான் இப்போ ஒரு சிக்கல் வந்துருக்கு.
அதாவது நார் சத்துள்ள உணவுப் பொருட்கள் அதிகளவில் சாப்பிட்டால், குழந்தை உருவாவது தள்ளிப்போகும் என்று கண்டுபிடித்துள்ளார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். நார் சத்துள்ள உணவுப்பொருள்னா என்னன்னு குழம்ப வேண்டாம். பழவகைகள்தான். பழவகைகள் அளவுக்கு அதிகம் சாப்பிட்டா, கரு உண்டாவதில் கால தாமதமாகும் என்று கூறியுள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள். நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் அதிகளவில் சாப்பிடுவதால், கருமுட்டை உருவாவதற்காக சுரக்கும் ஹார்மோனின் அளவு குறைந்து போகும். அதனால், குழந்தை பாக்யம் கிடைக்க ஆண்டுகள் தள்ளிப்போகும் என்று எச்சரித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

No comments:

Post a Comment