Friday, February 26, 2010

உயிரைக் குடிக்கும் உணவுப் பொருட்கள்!!





மாசம் பொறந்துச்சுன்னா... அவசர அவசரமா... மளிகை லிஸ்ட்டை தயார் செய்வோம். அதுலேயும், பட்டியல்ல முதல்ல... மங்களகரகமா 100 கிராம் மஞ்சள் பொடியைத்தான் முதலில் சேர்ப்போம். இப்படி எது மங்களகரமா முதல்ல ஆரம்பிக்கிறமோ, இதுலயும் மங்களகரமா கலப்பிடம் பண்றாங்கங்கறதுதான் அதிர்ச்சிகரமான செய்தி.
இந்த மஞ்சள் பொடியில் லெட் க்ரோமேட் என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது உடலுக்கு மிக மிக தீங்கு விளைவிக்கக் கூடியது. முன்னெல்லாம், விரலி மஞ்சள் ஒன்றை வாங்கி வந்து அதை அம்மியிலோ அல்லது மிக்சியிலோ பொடி செய்துதான் நாம் சமையல் செய்து வந்தோம். ஆனா, இப்போதான் ரெடிமேடா கிடைக்குதே... என்று நேரத்தை மிச்சம்படிக்கிறோம் என்ற பெயரில் கலப்படத்தை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் வேதனையான விஷயம்.
பெரும்பாலும் நம்மவர்களுக்கு காய்ச்சல், தொடர்ந்து வயிற்றுப்போக்கு மாதிரி ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டா, உடனே மருத்துவமனைக்கு போவோம்.
டாக்டரும் உங்களை நல்லா செக்கப் பண்ணி பார்த்துக்கிட்டு, நீங்க சாப்பிட்ட சாப்பாட்டுல ஏதோ புட் பாய்சன் இருக்கு. அதான் இந்த ப்ராப்ளம் என்று சொல்வார். நாமளும்... நேற்று சுண்ட வச்ச குழம்பை சாப்பிட்டோம்ல, அதைத்தான் டாக்டர் கரெக்ட்டா சொல்றாருன்னு நாம மனசுல நினைச்சுக்குவோம். ஆனா, பிரச்னை பழைய குழம்புல இல்லீங்க, நீங்க சாப்பிட்ட சாப்பாட்டுல ஏதோ அளவுக்கு அதிகமா கலப்படம் ஆகியிருக்கு. இதுதான் நிஜம்.
புட் பாய்சன் என்பது உடனடி வியாதிகள் மட்டுமின்றி பெரிய வியாதிகள் உருவாவதற்கும் மூலக் காரணமாக இருக்கிறது.
ஆபீஸ் போகிறவர்களுக்கு இந்த நாலு மணி ஆச்சுன்னாலே போதும்; ஒரு பஜ்ஜி, வடை, இப்படி ஏதாவது ஒரு எண்ணெய் அயிட்டத்தோடு டீயையும் உறிஞ்சி விட்டு வருவார்கள்.
பெட்ரோல், டீசல் எல்லாம் தயாரிக்கும்போது கடைசியா எண்ணெய் மாதிரி ஒரு திரவம் மிஞ்சும்ங்க. இதன் பெயர் மினரல் ஆயில் என்று சொல்வார்கள். இந்த எண்ணெய்க்கு மணமோ, நிறமோ இருக்காது. இதை எந்த எண்ணெயிடனும் கலக்க முடியும். ஒரு வித்திசாசத்தையும் கண்டுபிடிக்கமுடியாது. ஆனால், இந்த வித்யாசத்தை எப்போது தெரிந்துகொள்வீர்கள் தெரியுமா...? வீட்டுக்கு போவீங்க... ஆனா, சாப்பிடறதுக்கு மனசே வராது. ஏன்னா... நீங்க சாயங்காலம் சாப்பிட்ட வடை ஜீரணம் ஆகாது. இந்த எண்ணெய் ஜீரணம் ஆகாமல், அப்படியே நம் குடல்களில் தங்கி குறிப்பிட்ட காலத்திற்குப்பின் புற்று நோயை உண்டாக்கும்.
அதேபோல பப்பாளி விதைகளை மிளகுத் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு காயவைத்து மிளகுடன் கலந்து விடுகிறார்கள். கலப்பிடக்காரர்கள். நீங்கள் டீ பிரியரா... தொடர்ந்து டீ குடிப்பவரா... அப்படீன்னா கண்டிப்பா நீங்க இதை தெரிஞ்சுக்கணும்.
இலவம் பஞ்சு, மஞ்சநத்தி இலைகளை காயவைத்து, வறுத்து, அரைத்து டீத்துõளுடன் கலக்கிறார்கள். இந்த கலப்படம் உங்கள் உடல் நலத்தை உடனடியாக பாதிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், இது உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல.
நல்லவேளை, நாங்கள்... இம்மாதிரியான தரமற்ற உணவுப் பொருட்களை எல்லாம் வாங்குவதில்லை. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஐஎஸ்ஐ முத்திரை குத்தப்பட்ட உணவுப் பொருட்களைத்தான் கடைகளில் வாங்குகிறோம். அதுவும் அந்தப் பொருள் டிவிக்களில் விளம்பரம் செய்து, சுத்தமானது, தரமானது என்று அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே நாங்கள் வாங்குகிறோம் என்று மார்த் தட்டிக்கொள்கிறீர்களா...?
அப்படியென்றால்... அந்த வகையிலும் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள். ஆனால், கொஞ்சம் அறிவுப்பூர்வமாக ஏமாற்றப்படுகிறீர்கள்.
அக்மார்க் தர நிர்ணயம் எப்படி வழங்கப்படுகிறது தெரியுமா...? அதாவது ஒரு பெரிய நிறுவனம் மஞ்சள்பொடி தயாரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த நிறுவனம் தர நிர்ணய நிறுவனத்தை தொடர்புகொண்டு தங்கள் பொருளை ஆய்வுக்கு கொடுப்பர். அவர்கள் அதை தரம் பார்த்து, அக்மார்க் தரம் அளிப்பார்கள். இதில் பல நிபந்தனைகள் உண்டு. அதாவது அக்மார்க் நிறுவனம், மஞ்சள் பொடி நிறுவனத்திடமிருந்து முதலில் 50 கிலோவோ அல்லது 100 கிலோவிலான பொருட்களை பெற்று அந்தப் பொருட்களுக்கு மட்டுமே தரத்தை சோதிப்பார்கள். பின்னர் அவர்கள் தரச் சான்றிதழ் அளிப்பார்கள். ஆனால், அவர்கள் தரம் அளிப்பது அந்த நிறுவனத்திற்கு அல்ல. அவர்கள் தயாரிக்கும் அந்த 50 கிலோ உணவுப் பொருட்களுக்கு மட்டுமே அவர்கள் சான்றளிப்பார்கள். அதுவும் மஞ்சள் துõள் நிறுவனம் முன்கூட்டியே தாங்கள் அளிக்கும் உணவுப்பொருள் எத்தனை கிராம் பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக தர நிர்ணய நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு தரம் சோதிக்கப்பட்ட 50 கிலோ மஞ்சள் பொடியும், 50 கிராம் பாக்கெட்டுக்களில் மட்டும்தான் வரும் என்று எழுதிக்கொடுத்திருந்தால், 50 கிராம் பாக்கெட்டில் மட்டும்தான் தர நிர்ணய சான்று அளிக்கப்படும். மற்ற எடை பாக்கெட்டுக்களின் தரம் சம்பந்தப்பட்ட எந்த குறியீடோ, உறுதிமொழியோ சம்பந்தப்பட்ட நிறுவனம் குறிப்பிடக்கூடாது. இதுதான் கட்டுப்பாடு.
இதில்தான் மசாலா நிறுவனங்கள் விழித்துக் கொள்கிறது. 50 கிராம் பாக்கெட்டிற்கு மட்டும் தரச்சான்றிதழ் வாங்கிவிட்டு, அதை மீடியாக்களில் விளம்பரம் செய்துவிடுகிறார்கள். அதைப் பார்க்கும் நம்மவர்கள், நம் மனதில் டீவியில் காட்சியில் வரும் கம்பெனியின் பெயர் மட்டும்தான் ஞாபகத்திற்கு வருமே தவிர, அது எத்தனை கிராம் பாக்கெட் என்பது நம் கண்ணில் தெரியாது. அதேபோல தர நிர்ணய நிறுவனம் இவர்களுக்கு சோதனை செய்து அளித்தது, 50 கிலோவிற்கு மட்டும்தான். அதற்கு மேல் மஞ்சள் துõள் நிறுவனம் பொருளை உற்பத்தி செய்யும்போது, தயாரிக்கப்படும் ஒவ்வொரு கிலோவிற்கும் தர நிர்ணய சான்று வாங்க வேண்டும். ஆனால், தற்போது அம்மாதிரியான முயற்சிகளில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபடுவதில்லை. ஏனெனில் மக்கள் மனதில்தான் முன்பே நல்லபெயரை வாங்கியாச்சே... பின் எதற்கு வீண் செலவு என்ற எண்ணத்தில் கலப்பட உணவை, பாக்கெட்டில் அடைத்து சந்தையில் விற்றுவிடுகிறது. நாமும், தரத்தில் சிறந்தது என்று நம்பி சாப்பிட்டு, ஏமாளியாக நிற்பது நுகர்வோர் மட்டும்தான்.கலப்படத்தால் குழந்தைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா...?

No comments:

Post a Comment