Friday, February 26, 2010

உயிரைப் பறிக்கும் மருந்துகள்!!



நம்ம மக்கள் எப்போதும் கொஞ்சம் உஷார் பேர்வழிதான். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதுவும், இந்த மழை சமயம் வந்தால்போதும். தலைவலி, காய்ச்சல், சளி தொந்தரவுகளும் சேர்ந்தே வந்துடும். இந்த மேற்படி பிரச்னைகளுக்காக நம்ம குடும்பத் தலைவர்... ஏதோ மளிகைக் கடைக்கு செல்வது போல ஒரு பெரிய லிஸ்ட்டை தயார் செய்வார். அதில் காய்ச்சலுக்கு என்று தனி மாத்திரை. சளிக்கென்று தனி மாத்திரை. வீட்டுக்காரிக்கு அடிக்கடி தலைவலி வருமே... என்று திடீர்னு வந்த ஞாபகத்தில் அவளுக்கும் தலைவலி மாத்திரை... இந்தப் பட்டியல் ஒவ்வொருவருக்கும் மாறுமே தவிர, மற்றபடி பெரும்பாலான இந்தியர்களின் வீடுகளில் இதுதான் நிலைமை.
ஏங்க... வாங்கறது எல்லாம் சரிதான். நீங்க இந்த மாத்திரைகளைத்தான் சாப்பிடனும்னு டாக்டர் ஏதும் எழுதிக்கொடுத்தாங்களான்னு கேட்டோம்னு வச்சுக்கோங்க... என்னங்க புரியாதா ஆளா இருக்கீங்க... சும்மா தலைவலின்னு டாக்டர்கிட்ட போனா போதும். அந்த டெஸ்ட் எடு; இந்த டெஸ்ட் எடு...ன்னு அஞ்சு ரூபாய்ல தீர்ந்து போற சமாசாரத்தை ஐநுõறு ரூபா இழுத்து வச்சிடுவாங்க... என்னைப் பொருத்தவரை டாக்டர்கிட்ட போகாம இருக்கற வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த வசனங்கள் எல்லாம் நம்நாட்டின் நடுத்தர வர்க்கத்தின் குரல்தான்.
சரிங்க... நீங்க சாப்பிடுற மாத்திரையினால, இப்போ வர்ற காய்ச்சல், தலைவலி எல்லாம் சரியாப்போகும். ஆனா, இந்த மாத்திரையால ஏதாவது சைடு எபக்ட் வந்துடுச்சுன்னா... அப்ப என்ன பண்ணுவீங்கன்னு ஒரு கேள்வி கேட்டோம்னு வச்சுக்கோங்க... அதுக்கும் பதில் தயாரா இருக்கும்.
ஏங்க... மெடிக்கல்ல வந்து மாத்திரை, மருந்து வாங்கறோம்னு வச்சுக்கோங்க... இதெல்லாம் யோசிக்காமலா வாங்குவோம். எல்லாம் நல்ல மருந்துதான் என்று அடித்துச்சொல்வார்கள் நம்மவர்கள்.
அப்படி என்னதாங்க மாத்திரை சாப்பிடுறீங்கன்னு கேட்டோம்னா... பாராசிட்டமல் மாத்திரை என்பார்கள். இதுல நோ சைடு எபக்ட். பச்சக்குழந்தைங்க கூட சாப்பிடலாம் என்று ஒரு அறிவுப்பூர்வமான பதிலையும் சொல்வார்கள்.
சரி... இந்த பாராசிட்டமல் மாத்திரை எது எதுன்னு உங்களுக்குத் தெரியுமா...? என்று கேள்வி கேட்டால், அதற்கும் பதில் ரெடியாகத்தான் இருக்கும். ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க... பலபேருக்கு பாராசிட்டமல் மாத்திரை எது எதுன்னு உண்மையிலேயே தெரியாது. ஆனால், அவங்க போய் மெடிக்கல் ஷாப்புல... எனக்கு தலைவலி இருக்கு ஒரு பாராசிட்டமல் மாத்திரை கொடுங்கன்னா கரெக்ட்டா கொடுத்துருவாங்க... தெரியுமா...!
இப்படி பாராசிட்டமல் மாத்திரை எது எதுன்னே விஷயம் தெரியாத ஒரு தரப்பினர். பாராசிட்டமல் மாத்திரை இது இதுதான் என்று முழுவதும் தெரிந்து டாக்டர்கள் அளிக்கும் மருத்துவச் சீட்டு இல்லாமலேயே வாங்கும் விஷயம் தெரிந்த தரப்பினர் என்று இரண்டு வகையாக நமது சமுதாயத்தில் இருக்கின்றனர்.
கால்பால், டோலிபிரைன், பெபானில், மெட்டாசின், பைரிஜெஸிக், பி-125, பி-250 இப்படி நுõற்றுக்கணக்கான பெயர்களில் சந்தையில் பாராசிட்டாமல் மாத்திரைகள் விற்பனையாகின்றன என்பதை தெரியாதவர்கள் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
பாராசிட்டாமல் மாத்திரை சாப்பிட்டால், காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்றவை சில மணி நேரங்களில் சரியாகிவிடும் என்ற உங்கள் கணிப்பில் எள்ளளவும் பொய்யில்லை. ஆனால்... தலைவலி மாதிரி போன்ற ஒரு எண்ணம், உடல் லைட்டா சூடா இருக்கு... சாயங்காலம் காய்ச்சல் வர்றதுக்குள்ளே ஒரு பாராசிட்டாமல் மாத்திரை சாப்பிட்டோம்னா... சரியாப்போகும்னு நினைச்சுக்கிட்டு மாத்திரை சாப்பிடுகிற நபர்களா நீங்கள்... அப்படியென்றால்... உங்களின் ஆயுட்காலத்தின் முடிவை எண்ண ஆரம்பித்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா... மக்களை பயமுறுத்தவும், ஒரு சர்ச்சையை கிளப்புவதற்குமான கட்டுரை அல்ல இது. மக்கள் நீண்ட நாள் வாழ வேண்டும். மருந்துகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே இந்தக் கட்டுரை.
இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை, ஓடிசி வகை மருந்துகள் என்று சில வகை மருந்துகளை பிரித்துள்ளது. ஓடிசி வகை மருந்துகள் என்றால், மருத்துவர் சீடடில்லாமல் நீங்கள் மருந்துக் கடைக்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம். சாதாரண ஜூரம், தலைவலி, சளி, வலி, செரிமானத்திற்கு மற்றும் பலவகை பிரச்னைகளுக்கு நீங்களாகவே கேட்டோ அல்லது மருந்துக்கடையில் தரும் மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டிருப்பீர்கள். அவ்வகை மருந்துக்கள் அனைத்தும் ஓடிசி வகை மருந்துகளே.
இப்படி... நம் டாக்டர் அறிவுரை இல்லாமல் மெடிக்கல் ஷாப்பில் வாங்கும் இந்த மருந்துகள்தான் இப்போது நமது உயிரைப் பறிக்க தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த பாராசிட்டாமல் மாத்திரையில் என்னதான் பிரச்னை இருக்கிறது என்று பெங்களூரில் மனித வழி ஆராய்ச்சித் துறையில், மனித வழி ஆராய்ச்சி இணைப்பாளராக இருக்கும் இ.க. இளம்பாரதி சொல்லும் அதிர்ச்சியான தகவல்கள்...

No comments:

Post a Comment