Saturday, February 6, 2010

"சீ" செய்தி

இதையெல்லாம் திருடுவாங்களா?

மும்பையில சமீபத்துல 300 லிருந்து மூவாயிரம் வரை காண்டம் மிஷின் திருட்டுப் போயிருக்காம். ச்சீ... இதையெல்லாமா போய் திருடுவாங்கன்னு நீங்க ஆச்சர்யப்பட்டாலும், இதுதாங்க உண்மை. இந்தியாவிலேயே அதிகளவு எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளான பகுதி மும்பைதான். அதனாலதான், எய்ட்ஸ் சமூகத் தொண்டு நிறுவனங்களில் ஆரம்பிச்சு பல சமூக தொண்டு நிறுவனங்கள் சார்பில் தானியங்கி ஆணுறை மிஷின்கள், மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, சிவப்பு விளக்குப் பகுதி, ரயில்வேஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் என்று பல இடங்களிலும் மாட்டி வச்சிருக்காங்க. ஆனா, சில சமூக விரோதிங்க... இந்த மிஷினை திருடிட்டு அல்லது அதை சேதப்படுத்திட்டு போயிடுறாங்க. இது வேடிக்கையா நடக்கிறதா...? அல்லது வேறு ஏதும் சதித்திட்டமா என்று புரியவில்லை. ஆனால், மும்பையில்தான் எய்ட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் அதிகளவில் பரவி வருகின்றன. இந்த சமூக விரோதச் செயலால் இந்நோய் மேலும் அல்லவா பரவும். என்று கவலையடைந்துள்ளார், எச்.எல்.எப்.பி.பி.டி (இந்துஸ்தான் லேட்டக்ஸ் பேமிலி பிளானிங் புரோமஷன் டிரஸ்ட்) யைச் சார்ந்த ராஜேஷ் நைனாக்வால். அவர் கேட்கறதும் சரிதானே!

No comments:

Post a Comment