Saturday, February 6, 2010

ஆசை தந்த சாவு


கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே!

இந்தப் பழமொழி எதுக்கு பொருந்துதோ இல்லையோ... நான் இப்போ சொல்லப்போற விஷயத்துக்கு கரெக்ட்டா பொருந்தும். அம்மையார் பெயர் மெக்டோனால்ட். 47 வயதான இவர் ஒரு லாட்டரி சீட்டுப் பிரியர். அம்மணிக்கு சமீபத்துல லாட்டரி சீட்டுல நம்ம ஊர் பணத்துக்கு 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்திருக்கு. பரிசைப்பார்த்ததும் அம்மணிக்கு பயங்கர குஷி. தலைகால் புரியவில்லை. இந்தப் பரிசில் தன்னுடைய கணவனுக்கு பெரிய அளவில் பரிசு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை. போறதுதான் போறோம் லைட்டா கொஞ்சம் போதை ஏத்திக்கிட்டா நல்லாயிருக்குமேன்னு நினைச்சுக்கிட்டு, ஒரு குவாட்டரை வாங்கி உள்ள விட்டுக்கிட்டு சாலையில் நடந்து வந்துட்டு இருந்துருக்காங்க. அப்போ பார்த்து எங்கிருந்தோ வந்த கார், டோனால்ட் மீது மோதிவிட, அம்மணி ஸ்பாட்டுலேயே காலி. அவர் யார் என்று சோதித்துப் பார்த்த போலீஸார் அவர் பையில் வைத்திருந்த லாட்டரி சீட்டு வென்ற தொகை, லாட்டரி சீட்டு இவற்றையெல்லாம் எடுத்துப் பார்த்து, ‘சோ சேட்’னு துக்கம் தெரிவிச்சிருக்காங்க. பரிசு விழுந்த முழுத் தொகையையும் முழுசா அனுபவிக்காம இப்படி அற்ப ஆயுசுல போன டோனால்ட்டுக்கு நான் சொன்ன பழமொழி பொருந்தும்தானே!

No comments:

Post a Comment