Friday, February 26, 2010

திக் திக் மாத்திரைகள்

!

3


தலைவலி, சாதார காய்ச்சலுக்காக வாங்கிச் சாப்பிடும் மாத்திரையே உடம்புக்கு ஆபத்தா...? இப்படியே போச்சுன்னா என்னதாங்க செய்யறது என்ற உங்க கேள்விக்கு, நீங்கள் சாப்பிடும் மாத்திரை சரிதான். ஆனால், அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து சாப்பிட்டால், உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்கிறார் பெங்களூர் மனித வழி ஆராச்சித் துறையில் இணைப்பாளராக பணியாற்றும் இ.க. இளம்பாரதி.
பாராசிட்டாமல் மாத்திரை தனியாக மட்டுமின்றி சில வகை மருந்துகளுடன் சேர்ந்தும் வருகிறது. அவை கூட்டு வகை மருந்துகள் என்று சந்தையில் சொல்லப்படுகின்றன. உதாரனாமாக நமக்கு கிடைக்கக் கூடிய மருந்துகள் பிராக்ஸிவான், டார்ட், டோலாபர், பெப்ரினில், பாரால்டிம் மற்றும் எனண்ணற்ற பெயர்களில் கூட்டு மருந்தாகவும் பாராசிட்டமல் கிடைக்கிறது.
மருந்தைப் பற்றி மக்கள் இந்தளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்கிறது மற்றும் அதை எளிதாக அனைவரும் வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு நம்ம நாடு முன்னேறியிருக்கிறது என்றால் மகிழ்ச்சித்தான். ஆனால், அந்த மருந்தைப் பற்றி மக்கள் முழுசா தெரிஞ்சு பயன்படுத்தினால் இன்னும் மகிழ்ச்சிதானே.
ஆனால், மக்கள் அவர்கள் பயன்படுத்தும் மருந்தோட பயன்பாட்டைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்காம, பயன்படுத்த ஆரம்பிக்கும்போதுதான் பிரச்னையும் அங்கே ஆரம்பிக்கிறது. சரி, அப்படி என்னதான் பிரச்னை இந்த பாராசிட்டமலில் என்றுதானே கேட்கிறீர்கள்.
வலி மற்றும் ஜூரத்திற்கு பயன்படும் பல மருந்துகள் சந்தையில் இரந்தாலும், பாராசிட்டாமலை மட்டும் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், மக்கள் மத்தியில் அதிகமான நம்பிக்கைக்கு பாத்திரமானதும், பலதரப்பட்ட மக்களும், ஜூரம், தலைவலி பான்ற அடிக்கடி பலருக்கும் வருகிற பிரச்னைக்காகவும் பாராசிட்டமல் பயன்படுவதால்தான்.
பாராசிட்டமலுக்கு மூன்று வித குணங்கள் உள்ளன. காய்ச்சலை குணப்படுத்துவது, வலி நிவாரணி மற்றும் அழற்சியைக் குணப்படுத்துவது. மூன்று வகை செயல்கள் இருந்தாலும், காய்ச்சலைக் குணப்படுத்துவதில் தான் பாராசிட்டமல் திறம்பட செயல்படுகிறது. வலி நிவாரணியாக சுமாராகவும் மற்றும் அழற்சியைக் குணப்படுத்துவதில் மிகவும் சுமாராகவே பயன்படுகிறது. எனவேதான் காய்ச்சலுக்கும், தலைவலிக்கும் பயன்படும் பாராசிட்டமல் பெரிய வலிகளுக்கும், அழற்சிக்கும் பயன்படுவதில்லை.
ஹைப்போதலாமஸ், இதுதான் உடலின் வெப்ப சமச்சீர் நிலையை பாதுகாத்து வருகிறது. உடலில் வெப்ப உற்பத்திக்கும், வெப்ப இழப்பிற்கும் இடையே உள்ள சமச்சீர் நிலைமை சீர்கெடும்போது, நமக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. உடலில் வெப்ப சமச்சீர் நிலைமையை மீண்டும் ஏற்படுத்தி, அதன்மூலமாக காய்ச்சலை குறைப்பதே பாராசிட்டமலின் வேலை.
காய்ச்சலை நல்லபடியாதே குணப்படுத்துகிறது, அப்புறம் என்ன பாராசிட்டமலில் பிரச்னைங்கிறீங்களா? பாராசிட்டமல் பிரச்னையே இல்லை. அதை முறையா எடுத்துக்கிறோமா இல்லையாங்கிறதில்தான் பிரச்னையே. சரி அப்படி முறையா எடுத்துக்கலைன்னா, என்ன பிரச்னை? நம்ம கல்லீரலை படிப்படியாகச் செயலிழக்கச் செய்யும் மாத்திரை உட்கொண்ட சில நாட்களில் உடலில் எந்த வித்தியாசமும் தெரியாது. ஆண்டுகள் செல்லச் செல்ல கல்லீரலின் செயல்பாடு குறைய ஆரம்பிச்சிருக்கும். தலைவலி, காய்ச்சலுக்காக சாப்பிடும் பாராசிட்டமல் எப்படி கல்லீரலை செயல் இழக்கச் செய்கிறது என்பதை சற்று விரிவாகவே சொல்கிறேன்.
நாம் எடுத்துக்கொள்ளும் பாராசிட்டமல் கல்லீரலில் உள்ள சில வித செரிமப் பொருள்களால், அது என் அசிட்டைல் பி பென்சோ குயனோன் என்ற வேதிப்பொருளாக மாற்றமடைகிறது. இந்த வேதிப்பொருள்தான் பாராசிட்டமலின் எல்லா தீய விளைவுகளுக்கும் காரணம்.
கல்லீரலைச் சுற்றி கொழுப்பு போன்ற ஒரு சவ்வுப் பகுதி இருக்கும். இந்த சவ்வுப்பகுதியை பாராசிட்டமலில் நான் மேலே சொன்ன வேதிப்பொருள் ஆக்ஸிஜேனற்றம் செய்யத் துõண்டுகிறது. இன்னும் தெள்ளத் தெளிவாக சொல்லப்போனால், அந்த கொழுப்புப் பகுதியை முற்றிலுமாக இந்த மூலக்கூறுகள் கரைக்கின்றன. பாராசிட்டமல் அதிகமாக உட்கொண்டால், கல்லீரலைச் சுற்றி பாதுகாப்பு வளையமாக இருக்கும் கொழுப்பையே இது கரைக்கிறது என்றால், அடுத்தக்கட்ட பாதிப்பு கல்லீரலுக்குத்தானே!
கல்லீரலில் இந்த கொழுப்புப் பகுதியை காப்பதற்காக இயற்கையாகவே நமது உடம்பில் குளூட்டோதயோன் என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. இது, பாராசிட்டமலில் உள்ள வேதிப்பொருள்களை கூடியமட்டும் கொழுப்பை கரைக்காதவாறு பாதுகாத்துக் கொள்கிறது. ஆனால், நாம் எடுத்துக்கொள்ளும் அதிக அளவிலான பாராசிட்டமல் மாத்திரையால், குளூட்டோதயோனின் செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாக வலுவிலந்து போகிறது என்பதுதான் உண்மை என்கிறார் இளம்பாரதி.
இன்னும் என்ன என்ன பாதிப்புகள், இந்த மாத்திரையை அபாயகரமானது என்று அறிவித்த நாடு எது போன்ற திக் திக் தகவல்களை அடுத்த வாரமும் இளம்பாரதியே சொல்கிறார்.

No comments:

Post a Comment